Monday, May 10, 2010

திருமண பத்திரிக்கை

திருமண பத்திரிக்கையை அச்சிட்ட அலுவலகத்தை ஆராய்ந்த அவர்களுக்கு தெரியாது, அதன் அழகே என்னவளின் புகைப்படத்தால்தான் என்று.......

மேகம்

காதலில் தோற்று கண்ணீர் மழையை பொழிந்த மேகம், இந்நாட்களில் அதன் வெறுப்பை வெயிலாய் உமிழ்கிறது..........

Wednesday, April 21, 2010

அல்வா


பெண்ணே நீ சென்னையில் இருக்கும்போது திருநெல்வேலியில் எப்படி அல்வா பிரபலமானது........

டீ


டீ கடைக்காரனோ மாயக்காரன்,
வெண்ணீரில் எப்படி தேனீர் நிறத்தை கொண்டு வருகிறானோ.....

Saturday, April 17, 2010

பனிமலர் சிறை


பச்சை பசேல் என்று தோட்டம் இருந்தும் படுக்க அனுமதிஇல்லை,
பலபல வென பெண்கள் இருந்தும் பேச அனுமதிஇல்லை,
கடவுளுக்கு நிகரான ஆசிரியர்களோ காவலர்களாக,
கை நிறைய பணம் கொடுத்த நாங்களோ கைதிகளாக,
புழல் சிறையில் அல்ல "பணிமலரில்".

பிரிவு

அவள் என்னை விட்டு பிரிந்தபோது தான் புரிந்தது
ரோஜாவை செடியில் இருந்து பறித்தது எவ்வளவு பாவம் என்று.

ஏக்கம்

அவளுக்கு என் மீது காதல் வருமா என்று எண்ணினேன்
காதல் வருவதற்குல் என்னை சுமப்பதற்கு நான்கு பேர் வந்துவிட்டனர்.