Monday, May 10, 2010

திருமண பத்திரிக்கை

திருமண பத்திரிக்கையை அச்சிட்ட அலுவலகத்தை ஆராய்ந்த அவர்களுக்கு தெரியாது, அதன் அழகே என்னவளின் புகைப்படத்தால்தான் என்று.......

மேகம்

காதலில் தோற்று கண்ணீர் மழையை பொழிந்த மேகம், இந்நாட்களில் அதன் வெறுப்பை வெயிலாய் உமிழ்கிறது..........

Wednesday, April 21, 2010

அல்வா


பெண்ணே நீ சென்னையில் இருக்கும்போது திருநெல்வேலியில் எப்படி அல்வா பிரபலமானது........

டீ


டீ கடைக்காரனோ மாயக்காரன்,
வெண்ணீரில் எப்படி தேனீர் நிறத்தை கொண்டு வருகிறானோ.....

Saturday, April 17, 2010

பனிமலர் சிறை


பச்சை பசேல் என்று தோட்டம் இருந்தும் படுக்க அனுமதிஇல்லை,
பலபல வென பெண்கள் இருந்தும் பேச அனுமதிஇல்லை,
கடவுளுக்கு நிகரான ஆசிரியர்களோ காவலர்களாக,
கை நிறைய பணம் கொடுத்த நாங்களோ கைதிகளாக,
புழல் சிறையில் அல்ல "பணிமலரில்".

பிரிவு

அவள் என்னை விட்டு பிரிந்தபோது தான் புரிந்தது
ரோஜாவை செடியில் இருந்து பறித்தது எவ்வளவு பாவம் என்று.

ஏக்கம்

அவளுக்கு என் மீது காதல் வருமா என்று எண்ணினேன்
காதல் வருவதற்குல் என்னை சுமப்பதற்கு நான்கு பேர் வந்துவிட்டனர்.

தாய்

நான் அவளை காதலித்து நாயானேன்
அவள் வேறொருவனை மணந்து தாயானால்.

வாழ்நாள்

என் மரணமா அவள் மவுனமா என்று பார்த்தபோது
என் மரணத்துக்கு வாழ்நாள் போதவில்லை.

சிரிப்பு

நிலவு தேய்ந்து நம்மை அழ வைக்கும்
பெண் நம்மை தேயவைத்து அவள் சிரிப்பால்.

மாற்றம்

நான் உயர்ந்தபோது இருவரும் காதலித்தோம்
நான் தாழ்ந்தபோது நான் அவளை காதலித்தேன்
அவளும் தான் என்னை அல்ல வேறொருவனை.

மௌனம்

நீ பேசிய பிறகுதான் உணர்ந்தேன் உன் மவுனமே எவ்வளவோ மேல் என்று.

நிஜம்

காதல் நிஜம் காதலித்தான் பொய் என்றார்கள் சிலர்
அல்ல அல்ல
என் காதலி நிஜம் அவள் என் மீது வாய்த்த காதல் தான் பொய்.

காதல்

நான் உன் மீது வைத்த காதல் புனிதமானது என்று அவளிடம் சொன்னேன். அதற்கு அவளோ இதை நான் வேறொருவனிடம் சொல்லிவிட்டேன் என்றாள்.

சூனியக்காரி

தலைமை ஆசிரியை பெரிய சூனியக்காரி
ஆறடி மனிதனையே சிறிய அடையாள அட்டையில் மடக்கிவிட்டாலே.

கண்கள்

என் காதலிக்கே என் மீது கண்கள் இல்லாத போது
காதலுக்கு கண்கள் இருந்தால் என்ன இல்லை என்றாள் எனகென்ன .

இதயம்

ஏய் பெண்ணே நீ சைவம் என்று தானே கூறினாய்
பிறகு ஏன் என் இதயத்தை கேட்கிறாய்.

தாஜ் மஹால்

பாறையில் செய்த இதயத்திற்கு கட்டிய பளிங்கு மண்டபம் தான்
"தாஜ் மஹால்".

மௌனம்

நான் காதலிக்கிறேன் என்ற போதும் மௌனம்
நான் உயிர் இழக்கிறேன் என்ற போதும் மௌனம்
இதில் எந்த மௌனத்தை நான் சம்மதமாக எடுத்துகொள்வது.

மல்லிகை

அவள் கூந்தலில் மல்லிகையை பார்த்த பிறகு தான் தெரிந்தது
மல்லிகைக்கு அந்த வாசம் எப்படி வந்தது என்று.

புண்ணியம்

அவள் வீட்டு நாய் அவள் மடியில் இருந்த போது வருந்தினேன்
நாய் செய்த புண்ணியம் கூடவா நான் செய்யவில்லை?

கற்பனை


என்னை படைத்த போது பிரம்மனுக்கு இல்லாத கற்பனை
அவளை படைத்த போது எப்படி வந்தது.

பாறை

அவள் பாறை இதயத்தில் என் கண்ணீர் வழிந்து சென்றதே தவிர ஊர்ந்து செல்லவில்லை.

பட்டம்

காற்றில் அழகாய் பறக்கும் பட்டம் நீ
உன்னை பிடித்துவிடலாம் என்ற ஆசையில் மரணத்தை நோக்கி நான்.

ஆனந்த கண்ணீர்

நான் பிறந்ததும் என் தாயை பார்த்து எழுதிய முதல் கவிதை
"அழுகை"
பதிலுக்கு அவள் எழுதியது
"ஆனந்த கண்ணீர்".

உயிர்

பெற்று வளர்த்த தாயை விட்டு கொடுப்பதா இல்லை
தோல்வியில் தோல் கொடுத்த என் மனைவியை விட்டுகொடுப்பதா
தெரியாமல் விட்டுக்குடுத்து விட்டேன் என் உயிரை.

குழப்பம்

தேர்வறையில் என் போல் பலரை பார்த்து குழம்பினேன்
தேர்வு யார் நன்றாக எழுதுகிறார்கள் என்பதர்ர்ககவா இல்லை
யார் நன்றாக நேரம் கடத்துகிறார்கள் என்பதற்காகவா.

விடுமுறை


பாடங்களை களைந்து
    படுக்கையை தொடர்ந்து
      உறகங்களில் உறைந்து
        மணித்துளிகளை மறந்து
          வாழ்கையை வாழ்ந்த நாட்கள்
            "என் விடுமுறை நாட்கள்"

            Friday, April 16, 2010

            பாசம்


            பெண்ணே என் மீது உனக்கு அதிக பாசமோ
            ஒரு ரோஜாவுக்கு பதிலாய் மலர் வலையத்தையே வைத்தாய் என் கல்லறையில்.

            மரங்கள்


            மரங்கள் உயிரோடு இருந்தபோது அது அணைத்து பறவைகளுக்கும் இருப்பிடமாக
            உயிரை இழந்த பின் இந்த மதியற்ற மாந்தர்களுக்கு மட்டும் நார்காலியாக.

            ஆடம்பரம்


            ஆயிரகணக்கில் ஆடம்பரம் செய்யும் நமக்கு
            ஏன் அரை ருபாய் கொடுக்க மனம் வருவதில்லை ஏழைக்கு.

            அரக்கிகள்

            என் ஆசிரியரிடம் நியாயம் கேட்ட போது கோபத்துடன் தாக்கினார்
            பிறகு தான் யோசித்தேன் என்ன தான் குரங்குகள் மனிதர்கலை போல் இருந்தாலும் தாக்குவது அதன் சுபாவம்.

            தோல்வி

            தோல்வி தான் வெற்றிக்கு முதல் படி என்ற போது ஒரு படியில் உச்சத்தை அடைந்துவிட முடியுமா என்ன ?

            இதயம்


            ஏய் பெண்ணே உன் கூந்தலில் உள்ள ஈரம் கூடவா உன் இதயத்தில் இல்லை.

            பூ

            நான் கொடுத்த பூவை அவள் வாங்கியபோது புரியவில்லை அதை அவள் கூந்தலில் சூடுவதர்கில்லை என் கல்லறையில் வைபதற்கு என்று!

            காதலி


            நான் எழுதிய கவிதைகளை வெறுத்தேன் பெண்ணே உன் பெயரை கேட்டு

            நிலவின் அழகை வெறுத்தேன் பெண்ணே உன் முகத்தை பார்த்து

            பிரம்மன் படைத்தான் உன்னை பலர் அழகை சேர்த்து


            உன் அழகுக்கு நிகராய் எப்படி கவிதை எழுதுவேன் பல வார்த்தைகளை கோர்த்து.

            நான் உன்மீது வைத்த காதலை ஏற்று என் மரணத்துக்கு நாட்களை கூட்டு.

            தேடல்


            என் கண்கள் கொண்ட தேடல் அவளை காட்டியது
            அவள் கண்களின் ஊடல் எனக்கு மரணத்தை கட்டியது

            பிறந்தநாள்

            பிரம்மனுக்கு இனிய நாள் இன்று
            அவன் படைத்த அற்புதங்களில் ஒன்று
            செதுக்கிய சிலையை போன்று
            எப்படி சொல்லுவேன் அவள் என் காதலி என்று?

            எதிர்காலம்


            கல்லூரியில் உணவு பரிமாறிய என் தம்பியை போன்ற சிறுவனை கண்டு கண்ணீர் வடித்தேன்
            உணவு காரம் என்பதற்காக அல்ல
            அவன் வாழ்கை கசந்துவிட்டதே என்பதற்காக.

            களவு

            வீட்டில் களவு போய் விட்டதே என்பதற்கு கவலைபடுவதா
            இல்லை பெற்ற மகனை காணோமே என்று கவலை படுவதா
            காவலர்கள் கூறிய பிறகு தானே தெரிந்தது கலவடியதே தன் மகன் தான் என்று.

            தோல்வி


            ஆசிரியை நேரில் சந்திக்குமாறு அழைப்பு வந்தது என்று என் தந்தை பூரிப்புடன் சொல்லும்போது ,
            எப்படி அவரிடம் சொல்வேன் அவர்கள் அழைத்தது என் தோல்வியை பற்றி உரையாடுவதற்கு என்று?

            வெண்ணிலா


            ஏய் வெண்ணிலவே உன்னை சுற்றி ஆயிரம் நட்சத்திரம் இர்ருதாலும் நீ என் சுட்டெரிக்கும் சூரியனுக்ககவே காத்து கிடக்கிறாய்.

            வஞ்ச புகழ்ச்சி அணி


            "நான் பெற்ற மகனே உன்னால் தான் எனக்கு பெருமை" என்று என் தந்தை கூறிய
            போது தான் புரிந்தது
            ஒ ஆசிரியர் கற்பித்த "வஞ்ச புகழ்ச்சி அணி" இது தானோ என்று.

            நட்பு

            நண்பா நீ என்ன பெண்ணா நீ கூட என்னை வெறுத்து விட்டாயே.

            கசந்த கல்வி

            முதியோர்கள் முடிந்துவிட வேண்டும் எங்கள் வாழ்நாள் என்கின்றனர்
            இளைஞ்சர்களும் தான் முடித்து கொள்ள ஆசைபடுகின்றனர் வாழ்நாளை அல்ல "கல்வி பயுளுவதை".

            பெண்

            காதலியின் கண்கள் போதை தருவதால் தான் என்னவோ
            காதலை இழந்த பிறகு மதுவை நாடுகிறார்கள் ஆண்கள்.